மங்களகரமான சோபகிருது வருடம் ஆவணி மாதம் 21 ஆம் நாளுக்கான [07 செப்டம்பர் 2023, வியாழன்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
நல்ல நேரம்
காலை: 10.45 - 11.45 மணி வரை
மாலை: –
கொடுக்கல், வாங்கலில் லாபம் உண்டாகும். எதிர்பாராத சிலரின் அறிமுகம் புதுமையான சூழலை ஏற்படுத்தும். ஆபரணங்களின் சேர்க்கை அதிகரிக்கும். உத்தியோக பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தனவரவில் இருந்து வந்த இழுபறி குறையும். குடும்பத்தில் புது நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
பாகப் பிரிவினை தொடர்பான செயல்களில் விவேகத்துடன் இருக்க வேண்டும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். கணவன் - மனைவி இடையே புரிதல் உண்டாகும். மற்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய டெக்னாலஜி கருவிகள் மீது கவனம்.
வெளியே உணவு வாங்குவதை தவிர்க்கவும். பழைய நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். ஆடம்பர பொருட்கள் மீது ஆசை அதிகரிக்கும். உலகியல் வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்படுத்தும். தேவையற்ற வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உடல் பிறந்தவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். மனதில் இருந்து வந்த கவலை நீங்கும். சபை பணியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணியில் முதலீடு அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனை மேம்படும்.
அரசு வழியில் மறைமுகமான ஒத்துழைப்பு உண்டாகும். தூர தேச பயணங்கள் ஈடேறும். மனதில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். பிற மொழி சார்ந்த மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். விவசாயப் பணியில் மேன்மை உண்டாகும்.
முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். வீட்டினை மனதிற்கு பிடித்த வகையில் மாற்றி அமைப்பீர்கள். கல்வி கற்கும் மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த பணியில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
தேவையற்ற சிந்தனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும். சமூகப் பணியில் பொறுமையுடன் இருக்கவும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். மாணவர்களுக்கு நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். பயணங்கள் தொடர்பான செயல்களில் தாமதம் ஏற்படும்.
எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். கூட்டாளிகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மனைவி உடன் சிறு தூரப் பயணம் மேற்கொள்வீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும்.
வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். இழுபறியாக இருந்து வந்த தனவரவு வந்து சேரும். புது வேலை தேடும் முயற்சி சாதகமாகும். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். உறவினர்களைப் பற்றி புரிதல் ஏற்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். மனதில் புதிய ஆசை உண்டாகும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்தும் சூழ்நிலை அமையும். வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு மேம்படும். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகமாகும். வியாபாரப் பணியில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள்.
மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதைத் தவிர்க்கவும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். இழுபறியான செயல்களைச் செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். கடன் சார்ந்த சிந்தனை வந்து போகும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும்.
உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். எழுத்து சார்ந்த துறையில் முன்னேற்றம் ஏற்படும். திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அமையும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…